Featured

அப்பாவின் புல்லட் வண்டி

இன்று வீதிக்கு ரெண்டு ராயல் என்பீல்ட் வண்டி இருப்பது போல அல்ல அன்று. 80களிலும் , 90களிலும் புல்லட் வண்டி என்பது அரிது மற்றும் ஒரு தனி அடையாளமும் கூட. தற்கால சொல்லாடடில் சொல்ல போனால் “ராயல் என்பீல்ட் இஸ் எ நேம், புல்லட் இஸ் ஆன் எமோஷன்” என்றே சொல்லலாம். இன்றும் சினிமாக்களில் ஒரு மிராசையோ, மைனரையோ காட்டினால், ஒரு புல்லட் வண்டியில், கைப்பிடிகளின் இருபுறமும் ரிப்பன்கள் கட்டி, கலர் சட்டை அணிந்து, கருப்புக் கண்ணாடி போட்டு ரோட்டில் மெதுவாகப் பவனி வருவது போல் காட்டுவது வழக்கம். ஏனெனில் அந்த வண்டிகளில் வேகமோ, வளைந்து நெளிந்து வரும் லாவகமோ இல்லை. படைவீரர்கள் பாய்ந்து வரும் குதிரைகள் போலல்ல புல்லட்டுகள், அரசர்கள் அம்பாரியோடு அமர்ந்து வரும் யானைகள் அவை.

என் அப்பா எந்த விதத்திலும் ஆஜானுபாகுவான மனிதர் இல்லை. சராசரி உயரம், மெல்லிய தோற்றம். கைகளை மட்டும் தண்டால் எடுத்து புஷ்டியாக வைத்திருப்பார். குரலும் சிம்மகர்ஜனை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. மிட்டா மிராசும் இல்லை, ஜமீன்தாரும் இல்லை. ஆனால் அந்த புல்லட்டில் அமர்ந்து, சைடு ஸ்டாண்டை எடுத்து ஒரு உதை உதைத்து ஸ்டார்ட் பண்ண பின்பு வேறு மனிதர் ஆகிவிடுவார். அதிலும் சில நாட்கள் சபாரி உடை அணிந்து சென்றால் ஏதோ கருப்பு பூனை படையில் இருப்பது போன்ற தோரணை சேர்ந்து விடும். புல்லட் வண்டிகளின் தோற்றத்தை விட அதி முக்கியமான ஒரு அம்சம் உண்டு. அது தான் அவை போடும் சத்தம். டுபு டுபு டுபு என்று அப்பாவின் வண்டி தெருமுனையில் வரும்போதே வீட்டில் சத்தம் கேட்டு விடும். அரக்கப் பறக்க அவரை பார்க்க ஆவலாய் வாசலுக்கு ஓடுவேன். என்னைத் தூக்கி வண்டியின் முன்பகுதியில் பெட்ரோல் டேங்க் மீது உட்கார வைத்து ஒரு ரவுண்டு கூட்டிட்டு போவார். அப்பாவின் கைமேலே நானும் பிடித்துக்கொண்டு ஏதோ நானே புல்லட் ஓட்டுவது போல் பாவனை செய்து போவேன் . 

ஆரம்ப பள்ளிக்குச் செல்லும் போது பெரும்பாலும் என்னை அப்பா தான் கூட்டிக்கொண்டு விடுவார். வழக்கம் போல என்னை முன்னாடி உட்காரவைத்து பள்ளி போகும் வழியில் பேசிக்கொண்டே போவோம். முக்கியமாக எனக்கு அந்த நேரத்தில் திருக்குறள் சொல்லிக்கொடுத்துக் கூட்டிட்டு போவார். தமிழ் பாடத்தில் வருவதற்கு முன்னரே நிறைய குறள்கள் அப்பாவின் புல்லட்டில் தான் நான் கற்றுக்கொண்டேன். சிறு வயது முதலே எனக்குத் தமிழ் ஆர்வம் வந்ததற்கு அப்பாவும் புல்லட்டும் மிக முக்கிய காரணிகள். அது மட்டுமின்றி பள்ளிக்கு நண்பர்கள் மத்தியில் பந்தாவாக புல்லட்டில் அப்பாவுடன் வந்து இறங்குவது ஒரு தனி குஷி தான். வீட்டில் ஸ்டாண்ட் போட்டு வண்டி நிற்கும் பொழுது, கால் எட்டாத போதும் டுர் டுர் என வாயிலே சத்தம் போட்டு ஹேண்டில்பாரை அங்கும் அங்கும் திருப்பி விளையாடுவேன். பொம்மைகள் வைத்து விளையாடிக்கொண்டிருக்கும் தங்கையையும் வலுக்கட்டாயமாகக் கூட்டிக் கொண்டு வண்டியில் வைத்து ‘ரவுண்டு’ கூட்டிட்டு போவதாக சொல்லுவேன்.

ஒருவர் தனது வண்டியின் மேல் வைத்துள்ள பற்றை ஓட்டுவதில் மட்டும் உணர்ந்துவிட முடியாது. அவர்கள் வண்டியை பராமரிக்கும் முறையில் தான் அது வெகுவாக தெரியும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒரு சின்ன முக்காலியையும், பக்கெட் தண்ணியையும் எடுத்துக்கொண்டு வண்டி அருகே அமர்ந்து விடுவார் அப்பா. அதைத் தேய்த்துத் துடைத்து பளபளவென வைத்துக்கொள்வார். “நாளப்பின்ன உனக்கும் நல்ல வண்டி வேணும்னா நீயும் வந்து உன் சைக்கிள துடை” என்பார். நானோ ஆயுத பூஜைக்கு மட்டுமே வண்டியை அதுவும் வேண்டாவெறுப்பாய் துடைக்கும் கேஸ். துடைப்பது மட்டுமின்றி அதனை அவ்வப்போது செப்பனிட்டு வைப்பது ஒரு பெரிய போராட்டம். “மெக்கானிக் பூரா திருட்டு பயலா இருக்கானுங்க. போன தடவ வண்டிய விட்டுட்டு வந்தேன், நாசமாக்கி வெச்சிருக்கான்” என அடிக்கடி புலம்பி ஏழெட்டு மெக்கானிக் மாற்றுவார். 

அப்பாவின் புல்லட் பந்தம் அவர் வேலை நிமித்தமாக சில வருடங்கள் வங்கியின் கிராம கிளைக்கு மேலாளராக  சென்றபோதும் விடவில்லை. அங்கே அவர் பயன்படுத்த ஒரு பழைய புல்லட் வண்டி கொடுத்தார்கள். கிராமத்தில் சின்ராசு கணக்காக அதனை ஓட்டிக்கொண்டு திரிந்திருந்தார். வீட்டில் இருந்த அவரது வண்டியை பல வருடம் கழித்து விற்க நேர்ந்தது. அதனை விற்ற பின்பும் அதே போல ஒரு வாட்ட சாட்டமான பெரிய வண்டியை தான் வாங்கினார் அப்பா. நான் வாங்கிய முதல் வண்டியிலிருந்து, இன்று பயன்படுத்தும் கார் வரையிலும் அப்பாவின் புல்லட்டின் சாயல் கண்டிப்பாக இருக்கும்.  வெளிநாட்டில் இன்றும் ரோட்டில் டுபு டுபு என்று ஹார்லீ டேவிட்சன் வண்டியில் நீண்ட வெள்ளை தாடி வைத்து பைக்கர் கேங்க் ஆட்கள் யாரேனும் சென்றால், எனக்கு முதலில் நினைவிற்கு வருவது திருவள்ளுவர் தான். தாடியினால் அல்ல, என் டாடியினால்.

Featured

காலமும் இடமும்

நேரம் சுமார் 3, 3:30 இருக்கும். நல்ல பிப்ரவரி மாசத்து மாலை இளவெயில். வண்டியின் பின் சீட்டில் நண்பன். காலியான மவுண்ட் ரோட்டில் ஐந்தாவது கியரில் வண்டியை செலுத்தி கொண்டு போய்க்கொண்டு இருக்கிறேன். கடற்கரை காற்று சில்லென்று வீசி கைகளில் லேசாக துளித்திருந்த வியர்வையை திருடிக்கொண்டு சென்றது. Next >>|

காலை 7 மணி இருக்கும். கட்டிலுக்கு அருகே இருக்கும் ஜன்னல் கதவு இரவு மூடி தான் இருந்தது. காலையில் என்னை தட்டி எழுப்ப வேண்டாமென்று நினைத்த என் அம்மா, அந்த வேலையை சூரியனுக்கு கொடுத்துவிட்டு ஜன்னலை திறந்து விட்டாள் போலும். கொடுத்த வேலையை சூரியன் சுளீரென்று செய்தது. கண்ணை கசக்கி விழித்து பார்க்கையில் சூரிய கதிர்களில் தூசி துகள்கள் நடனமாடி கொண்டிருந்தன. “எழுந்தாச்சா ? சீக்கரம் கெளம்பு ஸ்கூலுக்கு லேட் ஆகுது” என்ற குரல் தூரத்தில் ஒலித்தது. Next >>|

இங்க காபி ஐஸ்கிரீம் நல்ல இருக்கும், ட்ரை பண்றியா” என்றேன். “இல்ல எனக்கு வெண்ணிலா தான் பிடிக்கும்” என்றாள். அதையே ஆர்டர் செய்து விட்டு பேசுவதரியாது அவள் அணிந்திருந்த பச்சை சுடிதார் மிகவும் அழகாக இருந்ததாக கூறினேன். அக்கம் பக்கத்தில் யாரும் தெரிந்தவர்கள் பார்த்து விட போகிறார்கள் என்ற பயத்துடன் நான் கூறியதை கேட்டு வெட்கப்பட்டு “தேங்க்ஸ்” என்றாள். Next >>|

கல்லூரி உணவு விடுதி வாசலில் ஒரு சிறிய குட்டி சுவரு. அதில் அமர்ந்து காலை ஆட்டியபடி நண்பர்களுடன் ஆளுக்கு ஒரு சாத்துக்குடி ஜூஸ் அருந்திக்கொண்டு தீவிர கலந்துரையாடல். “டேய் அவ மெக்கானிக்கல் தான். காலைல தான் ஒர்க்க்ஷாப் பக்கத்துல பாத்தேன்” என்றான் ஒருவன். “வாய்ப்பே இல்ல, ECE தான், என் பிரெண்டு சொன்னான்” என்றான் இன்னொருவன். இந்த உரையாடலில் கிளாசை மறந்து விட்டோமென்று வேகமாக சுவற்றில் இருந்து குதித்தோம். Next >>|

இங்க பாரு, மணி 10 ஆக போகுது. இன்னிக்காவது எழுந்து வேலையை பார்க்கலாம” என்றேன். “சண்டே தானே. இன்னும் ஒரு அரை மணி நேரம் தூங்கலாம்” என்று சொல்லி என் தோளில் ஏறி படுத்தாள் மனைவி. இயற்கையோ, ஷாம்பூவோ அந்த கூந்தல் மணத்தை அடித்துக்கொள்ள எந்த வாசமும் இல்லை. Next >>|

எந்த வித அறிவிப்பும் இல்லாமல் மழை திடீரென வானத்தை பிளந்து கொட்டியது. நாம் இந்த நேரத்தில், இந்த ரோட்டில் வருவோம்; மழையும் வருமென்று முன்னமே தெரிந்து வைத்திருந்த ஞானி ஒருவர் அங்கு டி கடை ஒன்னு போட்டு வைத்திருந்தார். வேகமாக வண்டிக்கு சைடு ஸ்டாண்டு போட்டு ஓடி வந்து. “அண்ணா ஒரு டி” என்றேன். “அப்டியே ரெண்டு பஜ்ஜி” என்று சொல்லிவிட்டு தலையை கைகளால் துவட்டி விட்டேன். பஜ்ஜியை ஒரு கடி கடித்தேன் …. Pause ||

…வீடு வந்துவிட்டது, காரை நிறுத்தினேன். கூடவே பாட்டும் நின்றது. கடையில் வாங்கி வந்த பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றேன். 90’ஸ், 00′ ஸ் பாடல்கள் நமை கொண்டு செல்ல முடியாத காலமும் இடமும் உண்டா என்ன ?

Featured

90’s பொங்கல்

பள்ளி பருவத்தில் என்னிடம் யாராவது “உனக்கு பிடித்த பண்டிகை எது?” என்று கேட்டால் யோசிக்காமல் தீபாவளி என்று சொல்லுவேன். பட்டாசு, வானவேடிக்கை, பலகாரம் என்று என்ன இல்லை தீபாவளியிடம். ஆனால் சற்றே வளர்ந்தவுடன், பொங்கலின் அருமை தெரிய ஆரம்பித்தது. அதுவும் இப்பொழுது வீட்டை விட்டு பல ஆயிரம் கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கையில், முன்பிருந்தவாறு பொங்கலை கொண்டாட உள்ளம் ஏங்குகிறது. பொங்கல் வருவதற்கு முன் வாரமே வீடு சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கி விடும். அந்த வாரத்தில் ஒரு நாள் எங்கள் வீட்டருகில் உள்ள ஒரு கடைக்கு சென்று பொங்கல் வாழ்த்து மடல்கள் வாங்கி என் நண்பர்களுக்கு அனுப்புவேன். என்னதான் அவர்கள் வீடு பக்கத்துக்கு தெருவில் இருந்தாலும், ஸ்டாம்ப் ஒட்டி தபாலில் தான் அனுப்புவேன். அனுப்பிவிட்டு அடுத்த நாள் பள்ளிக்கு சென்று “கிரீட்டிங் கார்டு வந்துதா டா?” என்று பெருமையாக விசாரிப்பது வேற.

தீபாவளியின் மவுசு மிஞ்சி போனால் இரண்டு நாட்களில் ஓய்ந்து விடும். ஆனால் எங்கள் வீட்டில் பொங்கல் ஒரு முழு பேக்கேஜ். போர் நயிட்ஸ், திரீ டேஸ் என களைகட்டும். முதல் நாள் போகி க்கு முன்னரே ஆளுக்கு ஒரு போகி மேளம் வாங்கி வருவோம். அதில் என் பெரியப்பா வண்ண வண்ண படங்கள் வரைந்து அவரவர் பெயரை எழுதி தருவார். போகி அன்று காலை 5 மணிக்கு அம்மா எழுப்பும் முன்னரே அக்கம் பக்கத்தில் மேள சத்தம் தட்டி எழுப்பும். முன் கூட்டியே சேகரித்து வைத்திருந்த காய்ந்த ஓலைகள், காகிதங்கள் இதர பொருட்களை வீட்டின் முன் வைத்து கொளுத்தி அதில் அந்த மேளத்தை சூடேற்றி அடித்து மகிழ்வோம். அதில் தெருவில் யார் தீ உயர எறிகின்றதுன்னு போட்டி வேற. போகி கொளுத்தி முடித்தபின் அம்மா அந்த இடத்தை சுத்தம் செய்து அழகிய கோலமிடுவாள். அன்று எனக்கு பெரிய வேலை எதுவும் இல்லை. டீவியில் “காட்டுக்குயிலு மனசுக்குள்ள “மற்றும் “தை பொங்கலும் பொங்குது” பாடல்களை ஆயிரம் தடவை கேட்பது மட்டும் தான்.

Image Courtesy: Dinamalar

பெரும் பொங்கலன்று காலை என் தந்தையுடன் கடை தெருவுக்கு சென்று கரும்பு உட்பட அணைத்து அயிட்டங்களையும் வாங்கிக்கொண்டு வருவேன். அம்மா வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், வடை, பொங்கல் குழம்பு என்று ஒரு விருந்தே சமைக்க, பொங்கல் பொங்கி வரும்பொழுது அனைவரும் சமைலறையில் ஒரு ‘பொங்கலோ பொங்கல்‘ போடுவோம். சூரியனுக்கு அனைத்தையும் படைத்து விட்டு, காக்கைக்கு வடையை வைத்து நான் காக்காய் மாதிரி கத்த என் தங்கை சொந்த குரலிலே பாடியே காக்கையை வரவழைப்பாள். படையல் சீக்கிரம் வைத்தால் தான் காக்காவை கவர முடியும், கொஞ்சம் லேட் ஆனால் கூட ஏரியா காக்கைகள் ஏற்கனவே புல் கட்டு கட்டி மிதப்பில் இருக்கும், வராது. பொங்கலுக்கு “ஸ்லீப்பிங் டோஸ்” என்பது எத்தனை பொருத்தமான பெயர். சாப்பிட்டு ஓரிரு மணி நேரத்தில் வீட்டில் அத்தனை விக்கெட்டும் அவுட் ஆகிவிடும். ஒரு மூணு மணி வாக்கில் வீட்டில் இருக்கும் கரும்பை கடித்து உரிய ஆரம்பித்தால் மாலை சிறப்பு திரைப்படம் ஆரம்பிக்கும் வரை ஓடும்.

Image Courtesy: ராஜா சபை

என் தாத்தா பிறந்த கிராமம் சென்னைக்கு மிக அருகில் என்றதால், பொங்கலுக்கு ஒவ்வொரு வருடமும் தவறாமல் அங்கே செல்வோம். பொங்கல் இரவு தங்குவது அங்கே தான். வைக்கோல் போட்டு அதற்க்கு மேல பாய் விரித்து தூங்குவதே ஒரு தனி சுகம். கிராமத்தில் மாட்டு பொங்கல் கூடுதல் குஷி தான். காலையில் எழுந்தவுடன் பம்புசெட்டில் குளியல். 10 நிமிடம் குளித்துவிட்டு ஒரு மணி நேரம் ஆட்டம் போட்டுவிட்டு களைப்பாக வீட்டுக்கு வந்தால் இட்லியும் கறிகுழம்பும். எட்டு பத்து இட்லிகளை லாவகமாக விழுங்கி விட்டு ஊரை சுற்றி ஒரு ரவுண்டு போய் வருவோம். மாலை 5 மணி வாக்கில் ஊரை சுற்றி மூன்று முறை மேளம் அடித்து மாடு விரட்டு துவங்குவதற்கு நோட்டிபிகேஷன் குடுத்து செல்வார்கள். ஊர் முழுவதும் உள்ள மாடுகள், மாட்டு வண்டிகள் அழகாக அலங்கரிக்கப்பட்டு ஊர் நடுவில் உள்ள கோவில் மைதானத்தில் ஓட்டிக் கொண்டு அணிவகுப்பதை பார்க்க ஆவலாக செல்வோம். மாடு விரட்டு முடிந்த கையோடு இரவு கிளம்பி விடுவோம். ஏனெனில் அடுத்த நாளுக்கான திட்டங்களை முன்கூட்டியே போட்டு வைத்திருப்போம்.

Image Courtesy அம்‌மச்‌சி‌க்‌கோ‌யி‌ல்‌ 

காணும் பொங்கலுக்கு போடுகிற முதல் பிளான் வழக்கம் போல சோறு தான். சித்தப்பா வீடு , பெரியப்பா வீடு என்று மொத்தம் பதினாறு டிக்கெட். புளியோதரை, தக்காளி சாதம் என்று வழக்கமான உணவாக இருந்தாலும் குடும்பத்தோடு மர நிழலில் ஜமுக்காளம் விரித்து பகிர்ந்து உண்பது ஒரு தனி அனுபவம். ஒரு வேன் புக் செய்து உணவு கட்டிக்கொண்டு வண்டலூர் பூங்கா, மஹாபலிபுரம் என்று வருடம் ஒரு இடம். அடுத்த நாள் ‘அலைமோதிய கூட்டம்‘ என்று தினத்தந்தியில் வரும் புகைப்படத்தில் நாங்கள் இருக்கிறோமா என்று தேடிய காலங்களும் உண்டு. ஒரு வழியாக ஆட்டம் போட்டு, கடற்கரையில் விளையாடி வீடு வந்து சேர இரவு ஆகி விடும். நான்கு நாள் கொண்டாட்டத்திற்கு பிறகு அடுத்த நாள் பள்ளி போகவேண்டும் என்பது இன்னொரு கொடுமை. இவ்வளவு ஆசையாக கொண்டாடிய பண்டிகையின் நினைவுகள் இறுதி வரை மனதில் இருந்து நீங்காது !

Featured

போலீசையே எதிர்த்து பேசரியா ?

இவனெல்லாம் இப்டி கேட்டா உண்மையை சொல்ல மாட்டான் சார். விசாரிக்கிற விதத்துல விசாரிக்கணும்

அந்த தாம்பரத்துல தாலி அறுத்த கேசையும் , கொருக்குப்பேட்ட கொலை வழக்கையும் இவன் பேருல எழுது லே

நாமளாவது பரவால்ல, திருநெல்வேலி போலீஸெல்லாம் தோல உரிச்சிடுவாங்க

போலீஸ் லாட்டி இருக்குதுல்ல. அத உன் உடம்புக்குள்ள விட்டுட்டு தட்டி தட்டி கேட்டா உண்மையோடு சேர்ந்து எல்லா விஷயமும் வெளியில வந்துடும்

என்று சினிமாவில் வசனங்கள் வரும்பொழுது சில்லறையை சிதற விட்டு கை தட்டிய கும்பலில் நானும் ஒருவன். காலம் காலமாக போலீஸ் வன்முறையை சகித்துக்கொண்டது மட்டுமல்லாமல் அதனைக் கொண்டாடியதன் விளைவு தான் இன்று அரங்கேறிய சம்பவம் என நான் கருதுகிறேன். ‘காவல்துறை உங்கள் நண்பன்‘ என்ற வாசகம் எந்த காலத்திலும் உண்மையாக இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. அதற்கு ஒரு படி மேல் சென்று காவல்துறையை கண்டால் அஞ்சி நடுங்கவேண்டும் என்ற நிலை மட்டுமில்லாமல் அவ்வாறு அஞ்சாதவர் தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு கொல்லப்படும் அவலம் இங்கு நிலவுகிறது.

‘போலீசையே எதிர்த்து பேசரியா?’ எனும் மனப்பான்மை அவர்களுக்கு வருவதற்கு, காரணம் என்ன? நமை பாதுகாக்கும் கடவுள் ஸ்தானத்தில் அவர்களை வைத்ததுதான் இவ்வாறு சில காவலர்கள் அரக்கர்களாக மாறுவதற்கு காரணியாக இருந்திருக்கிறது. உண்மையில் அவர்கள் சமூகத்தில் ஒரு பகுதி. ஒரு வணிகர், தொழிலாளி, பொறியாளர், மருத்துவர் போல காவல் துறையும் ஒரு அங்கமே தவிர லட்டிகளும் துப்பாக்கிகளும் கொடுக்கப்பட்டதால் யாரை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அடித்து வெளுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை.

எனக்கு கீழ் ஒருவன் இருக்கிறான், அவனை அடக்கி ஆளும் அதிகாரம் பிறப்பிலேயே எனக்கு உள்ளது என்ற நம்பிக்கை தான் சாதி வெறியின் உச்சமாக நான் பார்க்கிறேன். ஒட்டுமொத்த மக்களும் எனக்கு கீழே, நான் சட்டத்திற்கு அப்பாற்பட்டவன் என கருதும் சில காவலர்களை சாதி வெறியர்களை விட கேவலமான இடத்தில் தான் வைக்க வேண்டும். காவல் துறை என்ற ஒரு துறையை மட்டும் குற்றம் சொல்லி ஒரு பயனும் இல்லை. அரசு சார்ந்த பல துறைகள் இப்படி அதிகார போதையில் ஊறி கிடக்கின்றன. ஜெயராஜ், பெனிக்ஸ் இரட்டைக்கொலை சம்பவத்தை அரங்கேற்றியது காவலர்களாக இருந்தாலும், அவர்களை அடித்து துன்புறுத்தியதை சிறிதும் கணக்கிலெடுக்காத மாஜிஸ்திரேட்டும் , சரியே பரிசோதிக்காத மருத்துவரும் சம பங்கு வகிப்பதாகவே நான் கருதுகிறேன். அந்நியன் பட பாணியில் இவர்களில் ஒருவர் தன் வேலையை சரியாக செய்திருந்தால் கூட இந்த உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் !

இது மட்டுமல்லாது இறந்தவர்கள் மாரடைப்பாலும், மூச்சுத்திணறலாலும் இறந்ததாக தெரிவித்த எஸ்.பி முதல், அதே காரணம் சொல்லி இதை மூடி மறைத்து அந்த குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கும் முதலமைச்சர் வரை அனைவருக்கும் இதில் பங்குள்ளது. மக்கள் கூட்டம் கூட ஆரம்பித்த பின் அவசர அவசரமாக அந்த காவல் நிலைய காவலர்கள் அனைவரையும் இடமாற்றம், இடைநீக்கம் செய்து பாதுகாப்பது எதற்கு? வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்களேன். களைகளை பிடுங்கி எறிந்தால் உங்கள் துறைக்கு தானே நல்லது ? இது ஒரு பக்கம் இருக்க ‘காவலர்கள் ஊரடங்கு காலத்தில் ராப்பகலாக உழைப்பதால் அவர்களுக்கு இருக்கும் மன உளைச்சல் தான் இதற்க்கு காரணம்’ என்று கொடி பிடிப்போர் வேறு. அந்த பட்சத்தில் அவர்களுக்கு போதிய ஓய்வும் மனநல கலந்தாய்வும் செய்து வேலைக்கு தயாராக வைப்பது யார் பொறுப்பு? மக்களென்ன இவர்கள் அடித்து விளையாட ரப்பர் பந்துகளா ?

காவலர்கள் மீது மக்களின் கண்ணோட்டம் மாறுமோ இல்லையோ ஆனால் மக்கள் மீது காவலர்களின் கண்ணோட்டம் மாற வேண்டும். பணம், அதிகாரம் படைத்தோருக்கு ‘சார்’ போட்டு கும்பிடு வைத்துவிட்டு, எளிய மக்களை நாய்கள் போல் நடத்தும் போக்கை காவலர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். நன்மை செய்யவேண்டும் என்று ஆசையோடு காவல் துறையில் சேரும் பலர் இது போன்ற கொடூரர்களை பார்த்து இதுதான் நாம் இங்கு பிழைப்பதற்கு ஒரே வழி என்று மாறிவிடுவது தான் இதில் வேதனை. வேலைக்கு தகுதி இல்லாத காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். அதை காவல் துறை தான் முன்னின்று நடத்த வேண்டும். உள்துறை புகார்கள் பொதுமக்கள் பார்வைக்கு வரவேண்டும். மதிகெட்ட காவலர்களை சுற்றி இருக்கும் பாதுகாப்பு வளையத்தை தகர்க்க வேண்டும்.

இதில் ஒரு விஷயம் தான் என் மனதை வருடிக்கொண்டே இருக்கிறது. காவல் நிலையத்தில் இவர்களை சுற்றி சுற்றி அடித்து நிர்வாணமாக்கி பாலியல் கொடூரங்கள் செய்யும் ஒரு நொடி கூட அவர்களில் ஒருவருக்கு கூட தோன்றவில்லையா? இவர்களும் நம்மை போல மனிதர்கள் தானே என்று. ஒரு காவலாளி கூட தடுக்கவில்லையா? நூறு கொலை செய்த தீவிரவாதிக்கு கூட வயிறார சோறு போட்டு, முகத்தை கருப்பு துணியால் மூடி, வலியில்லாமல் சட்டென்று தூக்கிலிட்டு கொல்லும் மனித நேய சமூகம் அல்லவா நாம் ? வெட்கம்.

#JusticeForJeyarajAndFenix

Featured

கார்குழலி

10 மணி ஆனதை பாட்டாவே படித்தது என் கடிகாரம். வழக்கம் போல இன்னிக்கும் ஆபீசுக்கு லேட்டு. வீட்ல எல்லாரும் வேலைக்கு கெளம்பியாச்சு. அவசர அவசரமா அப்பா அயன் பண்ணி வெச்ச சட்டையை போட்டுட்டு தலையை வாரும்போது கண்ணாடியில் பாத்தா, மெத்தை மேல ஒரு லெட்டர். வெள்ளை கவரில் ஊதா நிற ஸ்கெட்ச் பேனாவில் என் பெயர் எழுதி இருந்தது. இத யாரு இங்க வெச்சிருப்பா , ஒரு வேள மளிகை லிஸ்ட் தர சொல்லி அம்மா வெச்சிருப்பாங்களோ என்று எண்ணிக்கொண்டே திறந்தேன். ஒரு கசங்கி போன காகிதம், அதில் ஒரு பெண்ணின் போட்டோ! போட்டோனா நல்லா மேக்கப்பெல்லாம் போட்டு ஸ்டைலா போஸ் குடுத்து பில்டர் போட்டு எடுத்தது இல்ல. செயற்கையான ஒரு சிரிப்புடன், ஒரு சிகப்பு நிற டிஷர்ட் அணிந்திருந்தாள். தூக்கி கட்டிய கொண்டை மற்றும் கையில் கரண்டி? ஒப்பனை எதுவும் இல்லாவிட்டாலும் அந்த முகம் அவ்வளவு அழகு. அந்த மையிட்ட கண்களை கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஆயினும் எனக்கு ஒரே குழப்பம். கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கறாங்களா வீட்ல? இல்லையே, போன வாரம் தானே “உனக்கெல்லாம் எவன்டா பொண்ணு குடுப்பான்” ன்னு அம்மா அப்பா தங்கச்சி உட்பட மூணு பேரும் ரவுண்டு கட்டி கலாய்ச்சாங்க. அப்படியே பொண்ணு பாக்கறதா இருந்தாலும் இந்த மாறி போட்டோவையா அனுப்புவாங்க ? போட்டோ அடியில் என்னை போலவே கோழி கிறுக்கல் கையெழுத்தில் “தெரேசா ஹாஸ்பிடல், நங்கநல்லூர்” என எழுதி இருந்தது. கூடவே ஒரு பெயர், கார்குழலி.

எதுக்கும் சந்தேகத்தை போக்கிவிட குடும்ப வாட்ஸாப்ப் குரூப்பில் ஒரு மெசேஜ் தட்டி விட்டேன். யாரும் என் அறையில் எந்த லெட்டரும் வைக்கவில்லை போல. இது எப்படி இங்கே வந்தது என்ற குழப்பத்துடன் ஆபீஸ் டீம் லீடுக்கு ஒரு போன் செய்தேன். “இன்னிக்கு ஒரு 1 ஹவர் லேட்டா வருவேன் ஜி” என்றேன். “மணி 10:10, அப்படியே நீ 1 மணி நேரம் லெட்டுன்னா கூட 10 நிமிஷம் முன்னாடி வந்திருக்கணும் டா” என்றார். வழக்கம் போல சிரித்து மழுப்பி போனை துண்டித்து அவசரமாக வண்டியை எடுத்து நங்கநல்லூர் விரைந்தேன். ஒரு வேளை நண்பர்கள் செய்யும் பிராங்க் ஆகா இருக்குமோ? இல்ல தங்கச்சி பிரென்டா இருக்குமோ? நம்ம தங்கச்சிக்கு இவ்ளோ சூப்பர் பிரெண்டெல்லாம் இல்லையே என்று யோசித்துக்கொண்டே ஹாஸ்பிடல் வந்தடைந்தேன். ரிசெப்ஷன் மேஜைக்கு சென்று ‘கார்குழலி‘ என்றேன். “டாக்டர் கார்குழலியை பாக்கணுமா? அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா ?” என்று பதில் வந்தது. “அதெல்லாம் இல்லையே. அவங்க ஷிப்ட் எப்போ முடியும்” என்று கேட்டேன். “1 மணிக்கு” என்றார். “ஓகே தேங்க்ஸ்” என்று சொன்ன கையோடு லீடுக்கு ஒரு “ஆஸ் ஐ அம் சபரிங் பிரம் பீவர்” மெசேஜ் தட்டி விட்டேன். காத்திருக்கும் நேரத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அத்தனையும் அலசினேன் அவள் விவரம் தேடி. ரோஜா பூக்களும் , நாய் குட்டிகளும் தவிர வேற எந்த புகைப்படமும் இல்லை. ஒரு வழியாக ஒரு யுகம் கழிந்து ஒரு மணி ஆனது. கைப்பையில் ஸ்டெத்தை அடைத்தபடியே வெளியில் வந்தாள் கார்குழலி!

அவளை பார்த்த முதல் கணமே என் கண்ணில் பட்டது அவள் இடுப்பளவு கூந்தல். அவள் பெற்றோர் மீது எனக்கு தனி மரியாதை வந்தது. பெரும் தீர்க்கதரிசிகள். பிறந்த பொழுதே இப்படி ஒரு பெயரை கச்சிதமாக வைத்திருக்கிறார்கள்! போட்டோவில் இருப்பதை விட நேரில் அவ்வளவு அழகாக இருந்தாள். சொல்ல போனால் நேரில் சில வருடங்கள் இளமையாக, சிக்கென்று தெரிந்தாள். அய்யய்யோ ஒரு வேளை இது வேற பொண்ணா இருக்குமோ, இல்ல அவளோட தங்கச்சி ஏதாச்சும் என்ற குழப்பத்தோடு அருகில் சென்று “கார்குழலி” என்றேன். “ஆமாம் நீங்க?” என்றாள். என் பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டு “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றேன். “என்ன விஷயமா?” என்றாள். “முக்கியமான விஷயம்” என்று சொல்லி அந்த போட்டோவை நீட்டினேன். என்னைப்போலவே அவளுக்கும் ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. “இது… இதுல இருக்கறது… என்ன மாறியே” என்று குழம்ப ஆரம்பித்தாள். “மார்பிங் பண்ணி விளையாடறீங்களா?” என்றாள் கோபமாக. அதற்க்கு அவளே “இல்லையே இந்த மாறி போட்டோவே நான் எடுத்ததில்லையே” என்று முணுமுணுத்தாள். “இது உங்களுக்கு எப்படி கெடச்சுது” என்றாள். நடந்த விஷயங்களை சொல்லி, நானும் அதே குழப்பத்தில் இருப்பதாக சொன்னேன். இதை பற்றி ஆராய அடுத்த ஓரிரு நாட்கள் கூடினோம். அதன் பின் பேச நிறைய விஷயங்கள் இருந்ததால் இந்த புகைப்படம் தேவைப்படவில்லை. ‘நீங்க, வாங்க‘ என்பது ‘நீ,வா‘ ஆனது பின் ‘டா,டி‘ ஆனது. ‘செல்லம், பேபி’ ஆக இரண்டு வருடங்கள் ஆனது. அதன் பின் வீட்டில் கூறி திருமணம் செய்து கொண்டோம்.

ஆரம்பத்தில் அவ்வப்போது அந்த மர்ம போட்டோவை பற்றி பேச்சு வந்தாலும், திருமணம் ஆனா சில வருடங்களில் அதெல்லாம் சுத்தமாக மறந்து போய்விட்டது. வாழ்க்கை ஜெட் வேகத்தில் மிகவும் சந்தோஷமாக போய் கொண்டிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. வீட்ல சிக்கன் பிரியாணி. நான் ஹாலில் செய்திகள் பார்த்தபடியே அவளுக்கு வெங்காயம் வெட்டி கொண்டிருந்தேன். “இதுக்கு நானே இந்நேரம் வெட்டி செஞ்சு முடிச்சிருப்பேன்” என்று புலம்பிக்கொண்டே வந்தாள் . “நீள நீளமா வெட்டினாதான் டேஸ்டு நல்லா இருக்கும். கொஞ்சம் பொறுமை” என்று அவளை பார்த்தேன். புதியதாக ஒரு சிகப்பு டீஷிர்ட் அணிந்திருந்தாள். “இது எப்போ வாங்கினது?, நல்லா இருக்கே” என்றதற்கு, “அம்மா வீட்டுக்கு போயிருந்தேன்ல, அப்பா வாங்கி வெச்சிருந்தாரு. சூப்பரா இருக்குல்ல? நீயும் தான் டிரஸ் எடுத்து தரியே தொள தொளன்னு ” என்றாள். அதை எங்கோ பார்த்த ஞாபகத்தில் இருந்த பொழுது வீட்டின் வெளியே ‘க்ளாங்‘ என்ற சத்தம். கதவை திறந்து பார்த்தால் யாருமில்லை. வாசலில் ஒரு பேக்கேஜ் இருந்தது. முகவரி இல்லை. என் பெயர் மட்டும் மேலே எழுதப்பட்டிருந்தது. அதை கொண்டு வந்து என் அறையில் உள்ள மேஜை மேலே வைத்து திறந்து பார்த்தேன். ஒரு விசித்திரமான கருவி போல் இருந்தது. கூடவே ஒரு கடிதம். அதில் அதே கோழி கிறுக்கல் கையெழுத்தில் “டைமர் 0 விற்கு வரும்வரை காத்திருக்கவும். க்ளாங் என்று சத்தம் வரும். ஒரு முறை பயன் பாடு மட்டுமே. சொதப்பி விடாதே“. என்று எழுதி இருந்தது. கடையில் எடை பார்க்கின்ற டிஜிட்டல் மெஷின் போல இருந்தது. ஒரு பெரிய டிஸ்ப்லே ஆனால் அதில் ஒன்றும் இல்லை. அதன் அருகில் ஒரு சிகப்பு பட்டன். அவ்வளவு தான். என்ன ஏதென்று புரியாமல் அந்த பட்டனை அழுத்தினேன். திடீரென எழுத்துகள் தோன்றின. ஒரு ஐந்து நிமிட கவுண்ட்டவுன் ஓட ஆரம்பித்தது. அதன் அருகே இரண்டு கோடிட்ட இடங்கள் தோன்றின. ‘தேதி’ மற்றும் ‘இடம்’.

இதெல்லாம் என்னவென்று புரிவதற்குள் 5 நிமிடம் , 3:50 ஆக குறைந்து விட்டது. “குழலி! நம்ம முதல் முதலா சந்திச்ச தேதி உனக்கு நினைவிருக்கா” என்று கத்தினேன். “ஏன் உனக்கு இல்லையா?” என்ற எதிர்பார்த்த பதில் வந்தது. “அதெல்லாம் இருக்கு மா. சும்மா டெஸ்ட் பண்ணேன். மார்ச் 23 தானே” என்றேன் 23/03/2015 என்ற தேதியை அதில் என்டர் செய்தபடி. “அதானே பாத்தேன்! எங்க நீ கரெக்டா சொல்லிடுவியோன்னு. மார்ச் இல்ல, பிப்ரவரி டா” என்றாள். நல்ல வேளை கேட்டோம்ன்னு நினைத்து சரியான தேதியை மாற்றினேன். கூகிள் மேப்ஸ் உதவியோடு நான் அப்பொழுது இருந்த வீட்டின் லேட்டிடியூட்/லாங்கிடியூட் முகவரியை எடுத்து அதில் என்டர் செய்தேன். நேரம் 2:40 என குறைத்திருந்தது. ஐயோ முக்கியமான விஷயத்தை விட்டோமே ன்னு சமையலறைக்கு ஓடினேன். “இந்த டிரஸ்ல சூப்பரா இருக்க, ஒரு போஸ் குடேன்” என்றேன். “சமைக்கும் போது தொந்தரவு பண்ணாத. பிரியாணி வேணுமா வேணாமா” என்றாள். “ஒரே ஒரு போட்டோ ப்ளீஸ்” என்றதற்கு ஈ என்று பல்லை காட்டி வேண்டா வெறுப்புடன் கரண்டியுடன் ஒரு போஸ் கொடுத்தாள். அந்த போட்டோவை பார்த்தவுடன் என் கண்ணை என்னாலே நம்ப முடியவில்லை. பல வருடங்களுக்கு முன் எனக்கு கிடைத்த அதே புகைப்படம்! அவசரமாக கம்ப்யூட்டரில் கனெக்ட் செய்து அதை பிரிண்ட் செய்தேன். “குழலி, உன் கூட தெரேசாவுல வேல செஞ்சாலே உன் பிரெண்டு. அவ பெரு என்ன? ஜெஸ்ஸியா ?” என்று கேட்டேன். “பிளெஸ்ஸி, எதுக்கு கேக்கற” என்றாள். “அவ சமீபத்து போட்டோ ஏதாது வெச்சிருக்க?” என்றேன் பிரிண்ட் வந்து கொண்டிருக்கும் நேரத்த்தில். “டேய் ரொம்ப வழியாத, அவளுக்கு இப்போ ரெண்டு பசங்க” என்றாள். நமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேல, இருக்குற பொழப்ப பாப்போம் என்று எண்ணிக்கொண்டே பார்த்தால் இன்னும் 30 வினாடிகள் தான் இருந்தது! இந்த வீட்டில் ஒரு பேனா கூட தேவைப்படும் போது கிடைக்காது என்று புலம்பிக்கொண்டே கிடைத்த ஒரு ஸ்கெட்ச் பேனாவால் அவள் புகைப்படத்தில் விரைவாக எழுதினேன். “தெரேசா ஹாஸ்பிடல், நங்கநல்லூர்” “கார்குழலி” என்று. மடித்து ஒரு கவரில் போட்டு என் பெயர் எழுதி அந்த கருவி மேலே வைத்தேன். நேரம் சரியாக 2..1…0 வை எட்டியது.

“க்ளாங்”

Coronavirus and Hate 

Back in 2015 when Chennai was floating as a result of continuous downpour and heavy floods, we experienced something magical amidst all the chaos and destruction. We came together as one people, stood beside each other and helped everyone we could. That did give all of us great hope that a disaster can strip off everything from us but not our humanity. We are in the thick of a much bigger catastrophe now and all I could see is that the virus is not just infecting our bodies but our souls first.

I know that we have always been divided in ideology which I think is crucial to the development of any society. A society which fails to encourage conversation and debate will never flourish in the long run. But that conversation which should be unbiased, fact-based and healthy goes completely haywire when we bring politics and religion into the equation. And social media is just the perfect cauldron in which this vile concoction is being brewed. It just hurts me to see educated, well read and incredibly smart people throw all logic out the door and talk smack about each other just because their political or religious scale is tipped way too much towards one side. 

We’ve always had the right to any political view or religious view of our choice, and yes politicians and godmen have always tried to preach and spread the superiority of their sect. And we have always spread our belief knowingly or unknowingly to our circle but when did we start stuffing each other’s faces with opinions? When did we start prioritizing the negatives of the other side over highlighting the positives of our side? Most of my facebook and whatsapp feeds are people trolling and name-calling the other group. Sanghis, Bhakths, Dumeels, Pavadais, Kullas and countless other slurs. We just lose the greatness of our belief when we start poking an eye for an eye. 

We need to treat politics and religion like the mix and match section in Pothys. We don’t have to take this all or none approach. It’s completely acceptable to dislike certain facets of your own religion or the party you support. You don’t have to die defending it. In Fact you should be the one calling it out in the first place. Likewise if you like certain aspects of a different party or faith, try to support it. We need to stop treating politicians like gods and need to stop playing politics with gods. The same people who applaud the Prime Minister’s address to the nation to announce lockdown and commend his efforts to bring people together by showing their support should criticize him for not talking about financial relief packages or food and shelter arrangements for the underprivileged. And we should keep this up regardless of who is sitting in the PM’s chair. People who blame Tablighi Jamaat for being irresponsible should also speak up about the Ram Navami celebrations in UP. 

This all seems like common sense right? That’s because it is. Let’s just try to be civil in these challenging times. And do our best to not be plain stupid. Lets not forward messages which we can’t find the authenticity of. Question everything. If you think that message you received about heat from the lamps killing the virus or the vibrations from the applause killing it, think twice before forwarding it. If you have the mobile data to send and receive such messages you have the data to research about it too. Let’s all voice our concerns, opinions and critiques but at the same time let’s try our best to not spread hate. Lets not murder our humanity in the process of killing this virus. 

ஆண்டு விழா

பள்ளி பருவத்தில் நாடகங்கள் சில நடித்திருக்கிறேன். சுற்றி உள்ள பிற பள்ளிகளில் ரோமியோ ஜூலியட்களும், ஷேக்ஸ்பியரின் மற்ற கதாபாத்திரங்களும் கை கோர்த்து காதல் வசனம் பேசி வந்த வேளையில்; எங்கள் பள்ளியில் முருகர்கள் உலகத்தை சுற்றி வருவதும், கட்டபொம்மன்கள் தூக்கிலிடப்படுவதும் வருடாந்திர நிகழ்வாக இருந்தது. அப்போ கொஞ்சம் வயித்தெரிச்சலா தான் இருந்தது, ஆனா இப்போ நெனச்சா பெருமையா இருக்கு. நான் பதினோராம் வகுப்பு படிக்கையில் நடந்த ஆண்டு விழாவில் ‘விபீஷண சரணாகதி‘ எனும் தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. ஆங்கில வசனம் வேற. அன்று பாடம் முடிந்ததும் என்னை அழைத்து “5 மணிக்கு நியூ ட்ராமா ப்ராக்டீஸ். 7ஏ கிளாஸ்ரூம்க்கு வந்துடு” என்றார் என் ஆங்கில டீச்சர் . “என்ன ரோல் மேம் எனக்கு ? ” என்று கேட்டதற்கு ஒன்றும் கூறாமல் சிரித்து விட்டு சென்றார் .

நாடகம், அதற்கு ஒத்திகை, ஆண்டு விழாக்காலம் என்றாலே ஒரே ஜாலி தான். இதை சாக்காக வைத்து பல வகுப்புகளை கட் அடித்து விட்டு போகலாம். அதே குஷியுடன் 5 மணிக்கு போனேன் . பல தெரிந்த முகங்கள் மத்தியில் அவளும் இருந்தாள் . “நம்ம பேட்ச் தான்டா வேஸ்ட். நம்ம சீனியர் செட்டும் சூப்பர், ஜுனியர் பொண்ணுங்கள பத்தி கேக்கவே வேணாம், யார பாக்கறது யார விடறது தெரியல” என்ற உலக வழக்கு என் பேட்ச்சுக்கும் பொருந்தும். ஆயினும் இந்த சமன்பாட்டில் சேராத ஓரிரு பெண்களில் அவளும் ஒருத்தி. நாடகத்தில் நமக்கு ஜோடி கதாபாத்திரம் அவளுக்கு கொடுத்தா நல்லா இருக்குமேன்னு நெனச்சிக்கிட்டே எங்க இங்கிலிஷ் டீச்சர் கிட்ட போனேன். “உனக்கு தான்டா சென்ட்ரல் ரோல். இருக்கிறதிலேயே நிறைய டயலாக் வேற. ஒழுங்கா பண்ணிடு” என்று சொல்லிக்கொண்டே கையில் சுமார் மூன்று பக்க வசனத்தை கொடுத்தார். பெருமையோடு வாங்கினேன். தலைப்பில் பரிச்சயமான ஒரு பெயர். ஹனுமான்.

அந்த ஒரு நொடியில் மனதில் பல பிம்பங்கள் ரோட்டை கிராஸ் பண்ணி சென்றன. குரங்கு முகத்துடன் நீண்ட வால் வைத்து பள்ளிக்கு முன் ஸ்டேஜில் நிற்பது துவங்கி, ‘ஜோடியா கேக்கற ஜோடி‘ன்னு கடவுளே காரி துப்புவது வரை. “சான்ஸே இல்ல மிஸ், வேற ரோல் குடுங்க எனக்கு” என்றேன். “அதான் சொன்னேனே உனக்கு தான் டயலாக் அதிகம்ன்னு” என்றார். “அவளுக்கு என்ன ரோல்?” என்று கேட்டேன் ஏதோ நவீன ராமாயணத்தில் ஆஞ்சநேயருக்கு ஆள் இருக்கற நெனப்புல. “சீதா” என்றார். படார்னு நெஞ்சு வெடிக்கற சத்தம் கண்டிப்பா பிரின்சிபால் ரூம் வரைக்கும் கேட்டிருக்கும். “ராமர மீட் பண்ணியா” என்று ஒரு 12th சீனியரை நோக்கி கை காட்டினார். மனசுக்குள்ள “மேடி… மேடி… ஹோ ஹோ மேடி” பாட்டை போட்டு அவனை ஒரு முறை நன்கு முறைத்தேன்.

ஓரிரு ஒத்திகைகள் முடிந்தபின்தான் தெரிந்தது எனக்கும் அவளுக்கும் இடையில் நிறைய வசனங்கள் உள்ளனவென்று. ஆனால் வேடிக்கை என்னென்னா அதில் முக்கால்வாசி வசனங்கள் ஆரம்பிப்பது ‘மதர்‘ அல்லது ‘சீதா மாதா‘ வில் தான். நல்லா செஞ்சீங்கடா. இதுல உச்சகட்ட காமெடி சீதையும் ராமரும் நின்று கொண்டு முதல் தளத்திலிருந்து வசனம் பேச, என் மொத்த வசனமும் நான் முட்டி போட்டு பேஸ்மெண்ட்டிலிருந்து தான் பேசிக்கொண்டிருந்தேன். இப்படி முட்டி தேய ஒரு மாதம் ஒத்திகை பார்த்தபின் இறுதியாக ஆண்டு விழா வந்தது. இத்தனை நாள் பள்ளி சீருடையில் ஒத்திகை பார்த்து பார்த்து வேஷம் போடுவதில் உள்ள குல்மா வேலைகள் தெரியாமல் போய்விட்டது.

நான், சுக்கிரீவன் மற்றும் வானர கூட்டங்கள் சென்று வாயில் ஒரு அயிட்டத்தை ஒட்டிக்கொண்டு வந்தோம். எனக்கு ஒரு வால் பொருந்திய பஞ்சகச்சம் தயாராக இருந்தது. அதை மாட்டிக்கொண்டு வரிசையில் நின்னால் எனக்கு பின் அஞ்சு-பத்து அடிக்கு ஒருத்தனும் நிக்க முடியாது. அவ்ளோ நீள வால். இதையெல்லாம் மாட்டிகிட்டு சட்டை எங்கடான்னு தேடிட்டு இருந்தேன். எங்க இங்கிலிஷ் மிஸ் வந்து “ஹனுமான் சட்டெயெல்லாம் போட மாட்டார்டா. அந்த நெக்லஸ்ல்லாம் போட்டுட்டு வா. டைம் ஆச்சு” என்றார். ஏற்கனவே அருமையான கெட்டப், இதுல டாப்லெஸ் வேறயா! முடியவே முடியாதுன்னு ஒற்றை வாலில் நிற்கவே சிம்மாசனத்திற்குப் பின்னிருந்து விசிறும் பெண்களிடமிருந்து எக்ஸ்ட்ரா சில்க் துப்பட்டா ஒன்றை உஷார் செய்து கொடுத்தார். முத்து படத்தில் வர்ற வயசான ரஜினி ஸ்டைலில் அதை உடலில் சுற்றிக்கொண்டு வந்தேன் .

என்னடா நம்ம கோலம் இப்படி அலங்கோலமா இருக்கேன்னு நினைத்துக்கொண்டு வெளியில் வந்தால் விஷ்ணு கதாபாத்திரத்தில் நடிக்கும் நண்பன் எதிரில் வந்தான். உடல் முழுவதும் அடையாளம் தெரியாத அளவிற்கு நீல பெயிண்ட். நம்ம எவ்வளவோ பரவாயில்லை என்று மனசை தேத்திக்கொண்டு மேடை நோக்கி சென்றேன். மண்டோதரி, சீதா உட்பட எல்லா பெண் கதாபாத்திரங்களுக்கும் முழு அலங்காரத்துடன் பட்டுப்புடவை வேற. பாதி டயலாக் அங்கேயே மறந்து போச்சு. நாடகம் துவங்கியது. ஆஞ்சநேயர் வேஷம் போட்டிருக்கோம், மனச அலைபாய விடக்கூடாது என்று சிந்தனையை ஒருமுகப்படுத்துகையில் “சாமி வேஷம்ன்றதுனால ரெண்டு நாள் கவுச்சி கூட தின்னாம இருந்தேன்” ன்னு கமல் சொல்லுவது நினைவுக்கு வந்தது. எப்படியோ நல்லபடியாக பாதி நாடகம் முடிந்தது. அப்போதான் சைத்தான் சைக்கிள்ல வர ஆரம்பித்தது.

அவரவர் காட்சி முடிந்தவுடன் திரைக்குப் பின்னே இருக்கும் ‘பேக் ஸ்டேஜ்‘ க்கு செல்வோம். அடுத்த காட்சி வரும் வரை அங்கிருப்போம். எங்க ஸ்டேஜ், பெஞ்சுகள் ஒன்று சேர்த்துக் கட்டப்பட்டு அமைத்திருந்ததால் திரைக்குப் பின் பெரிய பள்ளம் இருந்தது. ஒரு காட்சி முடிந்ததும் நான் வேகமாக ஓட, என் வாலினால் பேலன்ஸ் மிஸ் ஆக , வேறு எங்கும் தாங்கிப் பிடிக்க இடமில்லாமல் போக, என் பக்கத்தில் சிம்மாசன விசிறி ஜூனியர் பொண்ணு ஒன்னு நிக்க, கப்புன்னு அனிச்சையா அவள் இடுப்பைப் பிடித்து நான் தாங்கி நிற்க, கேவலமாக ஒரு முறை முறைத்தாள். நல்ல வேல செருப்பு போடல. மீதி நாடகம் முழுவதும் விசிறியை என் மூஞ்சில் விட்டெறியப்போற மாறியே விசிறினாள்.

நாடகம் முடியும் வேளையில் உச்சக்காட்சி நடக்குதம்மா‘ என்ற சீனில் சீதை தான் அணிந்திருக்கும் முத்து மாலையை கழட்டி என்னிடம் குடுப்பாங்களாம். நான் அதில் என் ராமரின் பெயரைத் தேடிக்கொண்டே இருப்பேனாம். அப்படியே திரையை மூடி நாடகம் முடியும். இதுல நம்ம சீதா டுபாகூர் மாலையைத் தராம, அவ போட்டிருந்த ஒரிஜினல் முத்து மாலையைக் கழட்டி கொடுக்க, நானும் நாடகம் முடிஞ்ச குஷியில் எங்கேயோ தூக்கி அடிச்சிட்டேன். ஒரு மணி நேரம் அந்த வாலோட போய் தேடிக் கொடுத்துட்டு வந்தேன். பையன் கண்டிப்பா பசில இருப்பான்னு தெரிஞ்சு என் தாய்க்குலம் நாலஞ்சு சமோசாக்களை முன்னரே வாங்கி பார்சல் செய்து கொடுத்துவெச்சிருந்தாங்க. இரவு பதினோரு மணிக்கு அதை பங்கு போட்டு சாப்பிட்டு நானும் என் நண்பர்களும் சைக்கிளை உருட்டிக்கொண்டு சென்றோம். வாயில் சமோசாவை அடைத்துக்கொண்டே அந்த இடுப்பு மேட்டரை நண்பர்களிடம் சொன்னது இன்றும் நினைவில் உள்ளது!

மடி சாப்பாடு

சமீபத்தில் நெருங்கிய நண்பன் ஒருவனின் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்தேன். அவன் பெற்றோரின் அறுபதாம் கல்யாணம். தடபுடலாக நடந்த விசேஷத்தில் Highlightஏ சாப்பாடு தான். நானும் எத்தனையோ இடங்களில் சாப்பிட்டு இருக்கிறேன், ஆனால் இதுபோல ஒரு மாறுபட்ட experience எங்கேயும் இருந்ததில்லை. அவர்கள் பிராமண குடும்பம் என்றதால் மடி சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதென்னடா மடின்னு கேக்காதீங்க. பாரம்பரிய வழக்கமாம். கல்யாணம் முடிந்ததும் மளமளவென்று அதே ஹாலில் மக்கள் வரிசையில் கீழே உட்கார துவங்கினர். நானும் என் நண்பன் இன்னொருவனும் ஒரு ஓரத்தில் இடத்தை போட்டோம். ஏதோ அவனுக்கு இந்த சாப்பாடு பத்திய சூட்சுமம்லாம் தெரிந்திருந்ததால் நான் தப்பித்தேன். இல்லேன்னா விவரம் தெரியாம பாதியிலே எழுந்து வந்திருப்பேன்.

இலை போட்டதும் கையில் சிறிது தண்ணீரை ஊற்றிக்கொண்டான் நண்பன். சரி உள்ள தெளிச்சு இலையை கழுவப்போறான்னு பாத்தா, இலைக்கு வெளிய ஒரு மூணு round சுத்தி வாயில உரிந்தான். “பரிசேஷணம் டா” என்றான். Rightu என்றேன். வரிசையாக உணவு பரிமாறுபவர்கள் வருவது தூரத்தில் தெரிந்தது. ஒரே குஷி, செம்ம பசி. சரி மொதல்ல என்ன வைக்கறாங்கன்னு பாத்தா, உப்பு! அடேய் கொல பசில இருக்கேன்டா கூட்டு பொரியல் ஏதாவது வைங்கன்னு மனசுல நினைத்தது யாருக்கோ கேட்டாற்போல சட்டுன்னு ஒரு மூணு பேர் வந்தாங்க. தரையில இருந்து சுமார் 2 அடி உயரத்துல இருந்து பொரியலை கரண்டிகள் இன்றி கைகளால் Airdrop பண்ணாங்க. ஹப்பாடான்னு கை வைக்க போனேன். பட்டுன்னு கையில் தட்டினான் நண்பன். எல்லாம் போட்ட பிறகு தான் ஆரம்பிக்கணும், நடுவுல சாப்பிடாதே என்றான். என் நெலம தெரியாம பேசரடா என்றேன். மொத்த பேரும் கைகோர்த்து ‘ஆமேன்‘ சொல்லிட்டு தான் சோத்துல கை வைக்க விடுவாங்களோ என்று நினைத்துக்கொண்டேன். நானும் ஒரு ஏழெட்டு நிமிடம் இலையை முறைத்துப் பார்க்க, இலை ஏகபோகமாக நிரம்பிக்கொண்டிருந்தது. என் பசி graph, Bell Curve இன் உச்சியை தொட்டு விட்டு பாதாளம் நோக்கி Fast ஆக பாய்ந்துக்கொண்டிருந்தது. இறுதியாக ஏகப்பட்ட சோற்றை தள்ளி அதில் ஒரு குழிக்கரண்டி நெய்யை ஊத்தினாங்க. தோளில் தட்டி “இப்ப சாப்பிடலாம்டா” என்றான் நண்பன். “இன்னும் எதுவும் ஊத்தலையே” என்றேன். நெய் சாதம் தான் Firstu என்றான்.

கொஞ்ச நேரத்துல சாம்பார் வாளி கண்ணுக்கு தென்பட்டது. இதுவாவது இருக்கேன்னு தெம்பாக சாப்பிட துவங்கினேன். சாம்பார்க்கு அப்பறம் ரசம் வரும் ன்னு காத்துக்கிட்டு இருந்த எனக்கு ஒரு surprise காத்துக்கொண்டிருந்தது. சப்பாத்தி மாதிரி ஒரு அயிட்டத்தை frisbee கணக்கில் ஒரு மாமா இலைக்கு இலை வீசிக்கொண்டு வந்தார். என் இலையில விழுந்தப்பொ தான் தெரிந்தது அது சப்பாத்தி இல்லை போளி ன்னு. சாம்பார்க்கு அப்பறம் போளியா, ஏன்டா என் flowவை கெடுக்கறீங்க ன்னு நினைத்துக்கொண்டே போளியை விழுங்க துவங்கினேன். “டேய் டேய் அத சாப்பிட்டியா?” என்று அவசரமாக கேட்டான் நண்பன். அய்யய்யோ அது சாப்பட்ற matter இல்லையா, கை தொடைக்கர்துக்கு குடுத்தாங்களா ன்னு நான் ஒரு நிமிஷம் பீதி ஆயிட்டேன். “நெய் ஒரு roundu வரும் டா, இரு” என்றான். மீதி இருந்த அறை inch போளியை ஆறு கரண்டி நெய்விட்டு அமுக்கியவுடன், காலி இலையில் சுமார் நூறு மில்லி பாலை அனாமத்தாக ஊத்தி விட்டு போனார் ஒருவர். “போலியை அதுல முக்கி சாப்பிட்டிருக்கனும் டா” என்று முறைத்துக்கொண்டே சொன்னான் நண்பன். அட போடா என்றேன். இதுக்கு நடுவில் தான் சுவாரசியமாக ஒரு விஷயம் நடந்தது.

இலைக்கு பத்து ருபாய் கைமாறுவது தெரிந்தது. ஆஹா இது சின்ன கவுண்டர்ல சுகன்யா போடற மொய்விருந்து மேட்டர்ல, நம்ம கிட்ட வேற பத்து பிசா இல்லையே என்று சட்டைப்பையை தடவிக்கொண்டிருந்தேன். அப்பறம் தான் தெரிந்தது எல்லாருக்கும் சாப்பாடும் போட்டு ஆளுக்கு பத்து ரூபாயும் தராங்கன்னு . நண்பனோட அப்பா அம்மா பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழனும் என்று வேண்டிக்கொண்டேன். ரசம் ரவுண்டு முடிந்தவுடன் மோர் சாதம் வர தொடங்கியது. எதிரில் சாப்பிடும் மாமி உள்ளங்கையை மட்டுமில்லாமல் முழங்கையையும் பயன்படுத்தி சாப்பிட்ட காட்சி காணக்கிடைக்காதது. பாயாசத்தை இலையில் இருந்து லாவகமாக சுழட்டி அடிக்க தெரியாத காரணத்தினால் கூச்சப்படாமல் கப்பில் கேட்டு வாங்கி குடித்தேன். அவா அவா சாப்பிட்டவுடன் பக்கத்தில் இருப்பவருக்கு காத்திருக்காமல் கப கபவென்று எழுந்து கை கழுவ சென்றார்கள். அதில் கூட ஒரு புதுமை. எச்சில் கை மற்றவர் மேல் படாமல் இருக்க, அதை கூப்பி சிறிது மேல்நோக்கி வைத்தவாறு கழுவுமிடம் செல்வது வழக்கம். இங்க அனைவரும் எச்சில் கையை கூப்பி தலைக்கு மேலே உயர்த்தி நடந்து செல்வதை பார்த்தபோது , ஜெமினி படத்தில் “எனக்கு தமிழ் பேச தெரியும்” என்று கையை உயர்த்தி நடந்துவரும் கிரண் நினைவுக்கு வந்தார்.

ஒருவழியாக வந்த வேலையை கச்சிதமாக முடித்துவிட்டு, நண்பனிடமும் அவன் குடும்பாத்தாரிடமும் விடை பெற்று கிளம்பினோம். எனக்கு இது ஒரு புதுமாதிரி அனுபவமாக இருந்தாலும், பைனாப்பிள் ரசங்களும், பன்னீர் பட்டர் மசாலாக்களும் ஆண்டுக்கொண்டிருக்கும் தற்போதய திருமண உணவு பந்திகள் மத்தியில் மடிசாப்பாடு எப்பவும் ஒரு படி மேல்!

Tamizhum 1190 Markum

Enna Sir, payyan indha varusham 10th ezhudhi irukkanla?

“Ada aama pa. Exam ezhuthittu avan jolly a thaan irukkan. Enakku thaan vayithula puliya karaikkidhu daily”

“Vidunga Sir. Unga payyanukku enna, nalla mark thaan vaanguvaan. Seri, Engineer a , Doctor a ? 12th la Enna stream la sekka poreenga”

“Avan friends ellam Computer Science thaan edukkaraanga. Ivanum athaan venungaraan”

“Seri adhulaye sethudunga. CS la mark vaangardhu easy nga. Enga akka payyan Biology. 183 yo 4 o thaan eduthaan.  190 kku mela poda maattangalaame”

“Adhuvum Seri thaan”

“French a Sanskrit a ? Sanskrit la llam easy a 200 vaangidlaam. Tamil lla llam 180 e kashtam. Summa adhula pottu waste pannadheenga”

 

Tamilnatla, atleast Chennai la, Pathaavadhula la irunthu Padhinonnavathu pora mukkavaasi maanavargaloda veetla nadakkara saadharna conversation thaan. Computer Science la easy marku, Tamil edutha mark poidum, patthaavadhu varaikkum tamil padichadhe podhungra manappanmai perumabaalana petrorukku irukku (payyanukku enna venum, enna padikkanumnu kekkardhilla, adhu vera vishayam). Kadasiya enna ? Mark vaanganum. Neraya vaanganum. Annan Payyan, Thangachi ponnu, Edhir veettu Ashwin , Pakkathu veettu Priya , ellatha vidayum neraya mark vaanganum. Adhukku kuruku vazhi, tamizh a paadhilaye athu vittu poidradhu.

Odanne “Naanga pudhusssa oru language a katthukkarom” “Our kids will know a new language” nnu kodi pudichittu vandhudaatheenga. Pudhu mozhi kathukkardhula thappilla. Infact evlo mozhi kathukkaromo ulagathula athana kalaacharatha pathi therinjikkalaam. Aana adhukkellam munnadi namma thaai mozhi a muzhusa therinjikkanumla? 11avadhu 12aavadhu la padichaa thaan tamizha, naanga veetla daily pesarome, enga payyan 10aavadhu varaikkum tamil thaan padichaane nnu nenaikkaravanga, avan periyavan aana apparam indha mudivu avana epdi baadhikkidhundradha yosichu paarunga.

11aavathula tamil a venaamnu sonnadhaala adhoda importance avlo thaan nra maari oru thappana abipraayam appove avan manasula form aaiduthu. Idhu poga tamil padicha “naattupuram” , French padicha royal aristocrat nra range la avana ethividradhu veetla. Apdiye padichu periyavan aagi , Paris la conference pogum bothu 11avathula padicha french a vechi ottiduvaaraam. Adhe Bonjour um Bon appétit thaane. Ellarukkum theriyum. Idhellam vida aangila mogam nammala enga vittuchu. Naan padicha school llam “Speak to me in English” nnu badge pottirunthom ellarum. Tamil la pesinaale punishment. Natural a school a english pesaravan, veetla poyum atha thaan pesaraan. So tamil la avanoda total vocabularye adhoda close aaiduthu. Pudhu Pudhu vaarthaigala enga kathuppaan ?

College mudichittu velaikku sendhu naalu peroda pesum bothu ‘maame’, ‘machi’ nnu kaalaaikkardhellam saralama varudhu. Konjam complex vaarthai engayaathu ketta artham therila. Naan onnum Sallaabam, Mandhagaasam nnu over complex words pathi sollala. Pirai, Madhi, Sitrundi, Thanikkai kooda therila. Adha vidunga. Tamil Ezhudha/Padikka ippo irukkara generation la ethana perukku theridhu. Avan kalyaana pathirikkaila irukka tamizhe inga paadhi per padikka theriyaama thaan kalyaanam pannikkaraanunga. Munnadi tamil paatu variyellam manappadama paadittu irundha gumbal ippo rendu line kku mela poradhilla. Yenna Thaamarai, Karky nnu kavinjargal neraya peru pudhu pudhu tamil vaarthaigala paatukkalla marubadiyum kondu varanumnu muyarchi pannittu varaanga. Namma payyan andha maari ‘complicated’ tamil llam therinjikku virumba maatraan.

Theatre la padam paakkum bothu, dialogue la chinna kavidhai vandha kooda, pakkathula irukkanavana artham kekkaraan. ‘Oru vaarthai Oru latcham’ llam TV la potta sutham. Rendaavadhu round kku mela namma payalukku oru vaarthaikku kooda artham therila. Avan pera avanaalaye tamizh la ezhudha therilainga. America la irunthu enna prayojanam ? Idhellam vida worstu. Avan aalu avanukku tamizhla ezhudhi kudutha love letter a en friend oruthanukku naan padichu kaatnen. Idhellam paathu sirikkardha azhardhannu therila.

Seri ellathayum vidunga. Ivan eppadiyo poittu poraan. 1190 mark eduthaan 12th la. Engineering padichachu, Velaikku poyachu, America vandhaachu, Kalyaanam Panniyachu, Kozhandhayum pethukkittachu. Apparam enna ? Pondattikku tamil aarvam konjaamavathu iruntha okay. Illa avalum “Bonjour” thaan na, porandha kozhandha gadhi enna aagarthu? Already veli naatla valarra kozhandha. Veliya english thaan pesi valara poguthu. Veetlayum “Sanjay how many times should i tell you to finish your bowl of cereal” nnu solli valatha, Tamil vaadaye irukkaadhu. Bombay heroine maari thaan tamil pesi valarum. Aana amma appa, porandhadhu Kodambakkam, padichadhu PSBB. Tamilnadu product thaan. Leave kku India vandhu “What paatti?, you dont even know how to operate an iPad” nnu sollumbothu paatikku perumaya thaan irukkum. Ullukkulla Tamil pesamaatraanenra varutham nichayam irukkum.

Idhanaala 11th la tamil edukkara ellarum tami aarvathoda valarraanga, sanskrit edukkara ellarum tamizhe theriyaama valaraangannu naan solla varla. Sanskrit eduthu padicha en friends neraya per, innum nalla tamizh pesittu padichittu thaan irukkaanga. Simple a sollapona, adhu namma thaai mozhi nra garvam varanum. Adha pesa theriyatti, padikka theriyaatti asingamnradha unaranum. Perumaya poi “I know how to speak a little tamil. But cant read or write” nnu peter vitta, adhu mallakka paduthu echi thuppara maarinnu unaranum. Naan onnum ellarayum baagam baagama silappadhigaaram, sevagasenthaamani padikka sollala. Andrada tamil a therinjikkonga. Ezhudha theriyaadha? Kathukkonga. Adhukkana muyarchi edunga. Mukkiyama ungalukke theriyatti unga pasangalukku eppadi solli thara mudiyum? Idha yosinga.

Tamizh padichu 185 maark eduthaana. Sandosha padunga. Ner ner themaa, Nirai ner pulimaa, Nirai Nirai Karuvilam, Ner Nirai Kuvilam nnu padikkara kadaisi thalaimurai nammalodadhu aaida koodathu.

 

Quarter Life Crisis

Note to Chennai Makkal: This post refers to a totally different crisis and has nothing to do with Alcohol Abuse.

So you are in your 20s. You have a fancy BE degree from an engineering college in Chennai. Working in an IT firm in Chennai or Bangalore. Things are looking good in your company. Not a lot of work mostly. Weekends are completely free. Well, some weekends you’ll have to go. Damn production issues. Other than that seeing movies FDFS, hanging out with friends on the beach and late night texts with that girl you like. You are happy that you are enjoying your life.

Oh wait. You are not that guy? Ok, you are in the USA. And you are studying there. Enjoying your newfound freedom. Going to clubs and dancing with girls. Drinking liquor which you thought was taboo back in India. Wearing $10 T shirts bought from Aeropostale and Old Navy during Black Friday. Commenting about how dysfunctional India is to your American friends. Anyways you are happy that you make more money in that part time job at the University Cafeteria than your friends back home.

Oh you are not that guy too? You already graduated and have a job? Then what, your life is settled (people say). You bought a car and posted 25 pics of it in FB. You make more money than you could spend. That nice little plot in ECR is looking not so distant now. Marriage talks are have started at house. You still reject it on the outside but dying to get married inside. You are slowly upgrading your furniture. Still from IKEA though. And all ready to move out from that 2BHK you are sharing with a roommate and move into a 1BHK as soon as you bring your wife on a dependent Visa.

What’s that? You are already married? Oh you just got married. Congratulations! And wife works in the US too? Bravo! Double the money, Double the saving. You start buying fancy rugs for your house, which you thought was a dumb idea 1 year back. Occasional Dine and Wine at expensive restaurants. Getaways to ski resorts for which you secured a great deal from online coupons.  No babies for 2 years you think. Total life enjoyment.

These categories mentioned above are a part of a very small subset of categories. You might fall under any of these categories or a lot of other categories which aren’t mentioned. But irrespective of that, if you are in your 20s you are bound to get thoughts about your life. About what your future will look like. What you have done in your past. Especially what you haven’t.

These thoughts might come to you during a lot of different circumstances. When you are standing in a long queue, waiting for your train, staring at the roof when you can’t sleep at night and most importantly, in the toilet. Not all of us get these thoughts on our own. Most of us need some external factors. Every girl from your undergraduate batch starts posting their marriage pictures, some even baby pics. That smart friend of yours got a job in a big tech company. That girl in school whom you didn’t pay attention as she looked very mediocre now looks like a model. That guy whom you played badminton with is now playing for the state. That junior guy from college gets into a university where you couldn’t get into. Your friend from work gets an ‘onsite’ opportunity. That Handsome friend of yours still has a lot of hair in his head while yours is on a exponential decrease. Those marriage advices you get from a variety of people ranging from Janitors to Taxi Drivers. Or even the climax of a movie

.Image

There are a lot of these things which makes you think, Why didn’t I do it? What exactly have I done with my life? Did I choose the wrong career? Isn’t it too late to actually achieve anything in my life? When you get these thoughts seeing others, you may think that its jealousy. And you are right. This is jealousy. But I think there is nothing wrong about it. Infact let me google some nice quote about this. Ha, here it is.

Image

I am sure the people who you look up to, those who put these questions in your head are infact going through the same thought process. Or did go through it before. Or will go through it at some point. Maybe people in the categories mentioned in the beginning all look at the people in the other categories and feel this way. So this is nothing new. Its all been said and done. I think the only way to benefit from these thoughts is to start answering them. You are still young to accomplish all these. You can still get that job you always wanted to. You can still play that sport that you left in school. And I think getting married is not a big difficulty. Getting married to the girl you like, now for that you need to work hard. But ya. Please restrain from approaching married girls, those ships have sailed. And to earn a billion dollars? You’ll have to work hard again. Maybe a little bit less hard than the previous point but still hard. Getting free marriage advice is not bad but the fact that they see you top to bottom and immediately start giving advise is bad. That is something which needs to be worked on. And for hair, there are a lot of products which are made from ariya mooligaigal from amazon kaadugal. I’ve seen in Raj TV. We still have hope.

So if these thoughts help you become a better person, help you realize your goals and help you move in the right direction why call it Quarter Life Crisis? Lets call it Quarter Life Enlightenment or Evaluation or even New Life Beginnings.